மும்பை: இந்திய அன்னிய செலாவணிக் கையிருப்பு ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 236 மில்லியன் டாலர் உயர்ந்து 319.47 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் உலக சந்தைகளில் நிலவிய மந்தநிலை காரணமாக அன்னிய முதலீட்டின் அளவு 471 மில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்து 319.23 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவரக் கையேட்டில் அன்னிய செலாவணி இருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அன்னிய செலாவணிச் சொத்துக்கள் 308.5 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து 294.84 பில்லியன் டாலராக நடப்பு வாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது கடந்த வாரத்தில் (ஜன 2) 863 மில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்து 294.53 பில்லியன் டாலர் என்ற அளவில் குறைந்தது.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் இருப்பு தத்தம் வாரத்தில் 15.4 மில்லியன் டாலர் குறைந்து 1.12 பில்லியன் டாலராக இருந்தது.
ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDR) எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமை மதிப்பு 56.7 மில்லியன் டாலர் அளவிற்கு குறைந்து 4.12 பில்லியன் டாலராக இருந்தது.
தங்கத்தின் இருப்பு மதிப்பு, மாற்றம் ஏதுமின்றி 19.37 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த வாரத்தில் 392 மில்லியன் டாலர் அதிகரித்து 19.37 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.