டெல்லி: 2014ஆம் ஆண்டில் இந்தியா நிறுவனங்களுக்கு உற்பத்திக்காக கிடைத்த ஆர்டர்களின் எண்ணிக்கை இரண்டு வருட உச்சத்தை எட்டியது. ஆனால் ஜனவரி மாத்தில் நிறுவனங்கள் உற்பத்திக்கான விலைகளை அதிகரித்ததான் காரணமாக ஆர்டர்கள் குறைந்ததது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தி அளவு 3 மாத சரிவை தழுவியது குறிப்பிடதக்கது.
மேலும் இந்த சரிவு ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு மற்றும் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவிக்க இருக்கும் மத்திய பட்ஜெட் ஆகியவற்றை எதிர்நோக்கியும் ஆர்டர்கள் குறைந்திருக்கலாம் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெச்.எஸ்.பி.சி
இந்திய உற்பத்தி சந்தையை பற்றி மார்கிட் நடத்திய ஹெச்.எஸ்.பி.சி உற்பத்தி பிஎம்ஐ குறியீடு மூன்று மாத சரிவை எட்டி 52.9 புள்ளிகளாக உள்ளது. 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்த குறியீடு 54.5 புள்ளிகளாக இருந்தது. மேலும் 50 புள்ளிகளுக்கும் மேல் இருந்தால் உற்பத்தி வளரச்சியில் உள்ள என பொருள்.
ஆர்பிஐ
மந்தமான வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சி ஆகியவற்ற எதிர்நோக்கி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைந்தது. இது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக விளங்கும் என ஹெச்.எஸ்.பி.சி-யின் தலைமை இந்தியா பொருளாதார அதிகாரி பிரான்ஜூல் பன்டாரி தெரிவித்தார்.
வட்டி விகித குறைப்பு
மேலும் ரிசர்வ் வங்கி நாளை வெளியிடும் இருமாத கொள்கையில் வட்டி விகித குறைப்பிற்கான அறிவிப்புகள் எதிர்பார்க்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்
மேலும் இந்தியாவின் உற்பத்தி அளவு பட்ஜெட்க்கு பின் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு மேலும் குறையவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.