டெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது டோட்டா சேவையில் சிறப்பான வளர்ச்சி மற்றும் வாய்ஸ் கால் சேவையில் கிடைத்த அதிகப்படியான வருவாயின் மூலம் இந்நிறுவனத்தின் 3வது காலாண்டு வருவாய் இரட்டிப்பாகியுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா நாட்டில் தனது வர்த்தகம் குறைவாக இருந்தாலும் இந்தியாவில் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் நடந்த வர்த்தகத்தின் மூலம் 1,436 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 610 கோடி ரூபாயாக இருக்கிறது.
மேலும் நிறுவனத்தின் வருவாய் அளவில் 6 சதவீத உயர்வை கண்டுள்ளது இந்நிறுவனம். இதில் இந்திய வர்த்தகத்தில் 13 சதவீத வளர்ச்சியும், ஆப்பிரிக்கா சந்தையில் 4 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.
மேலும் டாலர் வருவாயில் ஒப்பிடும் போது இந்நிறுவனம் இக்காலகட்டத்தில் 4 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.