மும்பை: அனில் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டுமான துறை நிறுவனமான பிப்பாவ் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை 819 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.இந்திய பாதுகாப்புத் துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
இதன் மூலம் பிப்பாவ் டிபென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை பொறுப்புகளிலும் இனி ரிலையன்ஸ் இன்ஃப்ரா செயல்படும்.
ரிலையன்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ்
ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் பிப்பாவ் நிறுவனத்தின் 13 கோடி பங்குகளை (18% பங்குகள்) 63 ரூபாய் என்ற வீதத்தில் கைபற்ற திட்டமிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது பங்கு கைபற்றுதல் அளவை 25.10 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
அனில் அம்பானி
இதுக்குறித்து ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் தலைவரான அனில் ஆம்பானி கூறுகையில், "பிப்பாவ் நிறுவனத்தின் பங்குகளை கைபற்றுவதன் மூலம் நாட்டின் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்குகொள்வத மட்டும் அல்லாது, நாட்டின் பாதுகாப்பு துறையின் உற்பத்தையையும் அதிகரிக்க அது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்" என்று தெரிவித்தார்.
பிப்பாவ் நிறுவனம்
ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்குகளை கைப்பற்றியதன் மூலம் பிப்பாவ் நிறுவனம் மேலான்மை குழுவில் மாற்றும் உருவாகும். இதன் மூலம் பிப்பாவ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி நியமிக்கப்படுவார். இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர்கள் குறைவான பங்குகளை வைத்திருப்பதால் அவர்கள் மேலாண்மை குழுவில் மட்டும் இடம் அளிக்கப்படும் என ரிலையன்ஸ் இன்ஃப்ரா தெரிவித்தது.
போட்டி
இந்நிறுவனத்தை கைபற்ற ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் பிஎம் முஞ்சால் தலைமை வகிக்கும் ஹிரோ மோட்டோகார்ப் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போட்டது. இந்த நிறுவனங்கள் அனைத்து நீர்முழ்கி கப்பல், போர் கப்பல் மற்றும் விமானஊர்தி வடிவமைக்கவும், கட்டமைக்கவும் திறன் படைத்தது குறிப்பிடதக்கது.