மும்பை: ஹோலிப் பண்டிகை முன்னிட்டு பங்குச்சந்தை, நாணயச் சந்தை, மற்றும் கமாடிட்டி ஆகிய அனைத்தும் இன்று விடுமுறை.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 68.22 புள்ளிகள் ஆதாவது 0.23 சதவீத உயர்வுடன் 29,448.95 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் நேற்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி, சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்து.
சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் தலீப் சங்வி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உருவெடுத்துள்ள நிலையில், ஜிஎஸ்கே நிறுவனத்தின் ஆஸ்திரேலியாவின் opiates வர்த்தகத்தை கைபற்றியதால் இந்நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 3.24 சதவீத உயர்வை எட்டியது.
இன்று சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்வுடனே துவங்கியுள்ளது. ஜப்பான் நிக்கி 1.02% உயர்வுடனும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட்ஸ் 0.13% உயர்வுடனும், ஹங்காங் ஹங் செங் 0.05% உயர்வுடனும் துவங்கியுள்ளது.