மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அட்சய திரிதியை முன்னிட்டு நாணய சந்தையில் தங்கம் விலை 125ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மேலும் தங்க விலை உயர்விற்குத் தற்போதுள்ள உலகப் பொருளாதாரம் மிகவும் சாதகமாக உள்ளது, அதேபோலஇந்தியாவில் திருமணம் மற்றும் விழாக்காலம் துவங்கியுள்ளதால் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் தேவைஅதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட், 10 கிராம் தங்கத்தின் விலை 125 ரூபாய் வரை உயர்ந்து ரூ.27,200 என்ற நிலையைஎட்டியது. மேலும் அடுத்த இரு நாட்களில் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்படும்.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி மீதான வர்த்தகமும் இன்று சூடுபிடித்துள்ளதால், 1 கிலோ பார் வெள்ளியின் விலை 200ரூபாய் அதிகரித்து 37,000 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளது.
டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.84 ரூபாயை எட்டியுள்ளது.
அடுத்தச் சில மாதங்களில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதால், இத்தாக்கத்தைச் சமாளிக்கரிசர்வ் வங்கி தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 555 புள்ளிகள் சரிவுடன் 3 வார சரிவைஎட்டியது.
இதனால் சந்தையில் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை தழுவியுள்ளது.