மும்பை: நாணய மசோதாவிற்கு இணைங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு யுத்திகளுடன் புதிய ரூபாய் நோட்டுகளை, கூடியவிரைவில் அச்சடித்துப் பொது விநியோகத்திற்கு விட உள்ளதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
இன்றைய தேதி வரையில் இந்தியாவில் போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபின்யாராலும் அச்சடிக்க முடியாத வகையில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளம் என ரிசர்வ் வங்கியின் துணைகவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கள்ள நோட்டுகள்
இந்திய சந்தையில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அவை அனைத்தும் பாமர மக்களின் கண்களுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம்.
புதிய ரூபாய் நோட்டுகள்
இப்பிரச்சனையை விரைவில் களையும் வண்ணம் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கஉள்ளது.
ஆர்.காந்தி
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் பேப்பர் தரம், பாதுகாப்பு நூலிலை, மை போன்றவற்றுக்கு ஈடு செய்யும்அளவில் இல்லை என்று காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.