18 மாதத்தில் ரூ.36,000 கோடி கட்ட வேண்டும்.. சுப்ரதா ராய்-க்கு வந்த புதிய பிரச்சனை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஊழல் வழக்கில் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற ரூ. 5 ஆயிரம் கோடி ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை உச்ச நீதிமன்றம் கோரியது.

வங்கிகள் கடைசி நேரத்தில் உத்திரவாத்ததை அளிக்க மறுத்தால் பெயில் பெற முடியவில்லை. மேலும் பெயில் பெற்றாலும் 18 மாதத்திற்குள் 36,000 கோடி தொகை செலுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதிய உத்திரவை பிறப்பித்துள்ளது.

விசாரணை

விசாரணை

நீதிபதிகள் டி.எஸ். தாகுர், ஏ.ஆர். தவே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சிக்கல்

சிக்கல்

சுப்ரதா ராய் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். ரூ. 5 ஆயிரம் கோடிக்கு வங்கி ஒப்புகை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக அவர் கூறினார்.

வங்கிகள்

வங்கிகள்

முன்பு உத்திரவாதம் அளிக்க முன் வந்த வங்கிகளும் செபியின் கட்டளை மற்றும் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், வங்கிகள் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.

சுப்ரதா ராய்

சுப்ரதா ராய்

2014-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் 65 வயதாகும் சுப்ரதா ராய். முதலீட்டாளர்களிடம் திரட்டிய ரூ. 36 ஆயிரம் கோடியை, அவரை விடுவித்த 18 மாதங்களுக்குள் 9 தவணைகளில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

மீண்டும் ஜெயில்

மீண்டும் ஜெயில்

சுப்ரதா ராய் சார்பில் அளிக்கப்படும் வங்கி பிணைத் தொகைகளை ஏற்கலாம் என்று செபி-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்தத் தவணைத் தொகைகளைத் திரும்பச் செலுத்துவதில் 3 தவணைகள் தவறினால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

விடுதலைக்குப் பின்

விடுதலைக்குப் பின்

ராய் மற்றும் நிறுவன இயக்குநர்கள் இருவர் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வசதிகள்

வசதிகள்

நிதியை திரட்ட ஏதுவாகச் சுபத்ரா ராய் அவர்களுக்குச் சிறைச்சாலைக்குள் சுப்ரதா ராய்க்கு டெலிபோன் மற்றும் இணையதள வசதி அளிக்க உத்தரவிட்டது.

ரூ.10,000 கோடி

ரூ.10,000 கோடி

இந்த விவகாரத்தைத் தீர்க்க வேண்டுமெனில் சஹாரா குழுமம் ரூ. 10 ஆயிரம் கோடியை செலுத்தினால்தான் சுப்ரதா ராய் அவர்களை விடுதலை செய்ய முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SC gives Sahara 18 months to pay up Rs 36,000 crore

SAHARA chief Subrata Roy’s immediate release from Tihar jail remained uncertain as the Supreme Court on Friday declined to relax the conditions for interim bail.
Story first published: Saturday, June 20, 2015, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X