டெல்லி: இந்தியாவை நீர்மூழ்கி கப்பல்களைப் பழுது மற்றும் மேம்படுத்தும் தளமாக மாற்ற, 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரஷ்ய நிறுவனம் உதவியுடன் அனில் அம்பானி தலைமை வகிக்கும் பிப்பாவ் டிபென்ஸ் நிறுவனம் புதிய தளத்தை அமைக்க உள்ளது.
இதற்காக இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டம் முழுவதும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படவும், சலுகைகள் பெற உள்ளது.
ஜேஎஸ்சி ஷிப் ரிப்பேரிங் சென்டர் என்னும் ரஷ்ய நிறுவனம் இந்தியாவின் பிப்பாவ் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இக்கூட்டணி இந்தியாவில் 877 EKM ரக நீர்மூழ்கி கப்பல்களைப் பழுது பார்க்கவும், வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இக்கூட்டணியில் பிப்பாவ் நிறுவனம் 51 சதவீத பங்குகளைக் கொண்டு செயல்பட உள்ளது.
மேலும் பிப்பாவ் டிபென்ஸ் நிறுவனத்தை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த அனைத்து விதமான உதவிகளையும் ஜேஎஸ்சி ஷிப் ரிப்பேரிங் சென்டர் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இப்புதிய கூட்டணியில் உருவாகும் புதிய நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் பெறும் எனக் கணிக்கப்பட உள்ளது.