மும்பை: செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் துவக்கம், பெடர்ல் வங்கியின் வட்டி உயர்வு ஆகிய காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் வரை சரிந்து சந்தையைப் பதம் பார்த்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 330 புள்ளிகள் வரை உயர்ந்து செவ்வாய்க்கிழமை தாக்கத்தைச் சரிசெய்தது. செவ்வாயும்... புதனும்..
மும்பை பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படத் துவங்கியது. இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு சுமார் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீடு
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 311.18 புள்ளிகள் உயர்ந்து 28,493.32 புள்ளிகளை எட்டியது. மேலும் புதன்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், மஹிந்திரா, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎப்சி ஐ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
நிஃப்டி
புதன்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 104.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,633.50 புள்ளிகளை எட்டியது.
நாணய சந்தை
இன்றைய வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2510.72 ரூபாயாகவும். 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2352.13 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னை வர்த்தகச் சந்தையில் இன்றைய வர்த்தக நிலவரப்படி 1 கிலோ பார் வெள்ளியின் விலை 31,356 ரூபாய்.
டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 63.58 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.