மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனமான சஹாரா குழுமத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் உரிமத்தை செபி அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே 24,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
உரிமம் ரத்து
குழுமத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கும் போது சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை இயக்க தகுதி இழந்துள்ளதாகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் செபி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தான் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் விவரித்துள்ளது.
முதலீட்டாளர்களின் கதி?
உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் வர்த்தகம் அனைத்தும் மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது.
போர்ட்போலியோ உரிமம்
சில நாட்கள் முன்னர்த் தான் சஹாரா நிறுவனத்தின் போர்ட்போலியோ மேலாண்மை உரிமத்தை செபி ரத்து செய்தது.
முதலீட்டுக்குத் தடை
மேலும் செபி தற்போது அறிவித்துள்ள படி, இனி சஹாரா மியூட்சுவல் பண்ட் மற்றும் சஹாரா அஸர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு முதலீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..