டெல்லி: அன்னிய முதலீட்டிற்கு முக்கியக் காரணியாக விளங்கும் பணவீக்கத்தின் அளவு இந்திய சந்சையில் வலிமையான நிலையை அடைத்துள்ளது. ஜூலை மாதத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பிற்கான கணிப்புகள் மற்றும் கணிசமான அன்னிய முதலீடு நாட்டின் பணவீக்க அளவை அதிகளவில் குறைத்துள்ளது.
நுகர்வோர் பணவீக்க குறீயிடு (CPI)
முதலீட்டாளரும், நுகர்வோரும் மகிழ்ச்சியடையும் வகையில் ஜுலை மாதம் நாட்டின் பணவீக்கத்தின் அளவு 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூன் மாதம் இதன் அளவு 5.4 சதவீதமாக இருந்தது.
இச்சரிவிற்கு முக்கியக் காரணமாக விளங்குவது தொழில்துறை உற்பத்தி அளவுகள் தான்.
கணிப்புகள்
சந்தையின் கணிப்புகளின் படி ஜூலை மாதம் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகளையும் உடைத்து இந்திய சந்தை சிறப்பாக உள்ளது.
உணவு பணவீக்கம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருத்த உணவு பணவீக்கத்தின் அளவு ஜூலை மாதத்தில் 5.5 சதவீத்தில் இருந்து 2.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி
மேலும் ஜுன் மாத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு எனப்படும் IIP குறியீடு 3.78 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மே மாதம் இதன் அளவு 2.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி அளவும் ஜூன் மாதத்தில் 4.6 சதவீதமாக இருந்தது.
ஜிடிபி
இந்நிலை 2015ஆம் நிதியாண்டு முழுவதும் நீடித்தால் இந்தியாவின் ஜிடிபி அளவு கண்டிப்பாக உயர்வு நிலையை எட்டும் எனத் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..