சென்னை: உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்திய சந்தையில் சுமார் 11,000 கார்களை விற்பனை செய்து, ஆடம்பர கார் விற்பனையில் முதல் இடத்தில் பிடித்துள்ளது.
மேலும் அடுத்து வரும் மாதங்களிலும், விற்பனை அளவு தொடர்ந்து உயரும் எனப் பென்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
11,000 கார்கள்
இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகரிக்கப் பல முயற்சிகள் செய்து வரும் பென்ஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் சுமார் 11,000 கார்களை விற்று, 3 வருடமாகத் தொடர்ந்து இரண்டு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எபர்ஹார்ட் கெர்ன்
இந்திய கார் விற்பனை சந்தையில் இன்னமும் பென்ஸ் நிறுவனத்திற்குத் தனி இடம் உள்ளது. பொதுவாக வருடத்தில் 2வது பாதியில் விழாகாலங்களை முன்னிட்டுக் கார் விற்பனை அதிகமாக இருக்கும் இந்நிலையில் 2015ஆம் ஆண்டும் எங்களுக்குச் சிறப்பான வருடமாக அமையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எபர்ஹார்ட் கெர்ன் தெரிவித்தார்.
6 மாத விற்பனை
2015ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்நிறுவனம் 6,659 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 41 சதவீதம் அதிகமாகும்.
புதிய அறிமுகம்
மேலும் அடுத்த 4 மாதங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா 5 புதிய மாடல் கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தை
இனி இந்திய சந்தையில் 1 அல்லது 2 பிராண்டுகளுடன் விற்பனை செய்யும் திட்டம் இல்லை. சுமார் 9 பிரண்டு கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய உள்ளோம் எனக் கெர்ன் தெரிவித்தார்.
39 நகரங்கள்
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 78 கிளைகளுடன் 39 நகரங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..