மும்பை: இந்தியாவில் தொடர் உணவு நிறுவனமான மெக் டொனால்ட்ஸ் இந்திய கிளை நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தனது கிளைகளை இரண்டு மடங்கு அதிகரிக்கச் சுமார் 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மெக் டொனால்ட்ஸ் இந்தியா
இதுகுறித்து மெக் டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மாஸ்டர் ஃபிரான்சைஸ் நிறுவனமான வெஸ்ட்லைப் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் அமித் ஜாதியா கூறுகையில், இந்தியாவில் தற்போது 213 கிளைகள் உள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 வருடத்திற்குள் 475 ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக 750 கோடி ரூபாய் முதலீட்டுச் செய்ய நிர்வாகம் முதலீடு செய்துள்ளது.
20 வருடம்
மெக் டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 20 வருடமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குப் போட்டி அதிகரித்துள்ளதால், புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்நிலையில் இந்தியாவில் பர்கர்கிங், டாமினோஸ், பிட்சா ஹட் மற்றும் டன்கின் டோநட்ஸ் ஆகிய நிறுவனங்களின் வர்த்தகம் நிலையான வர்த்தகத்தைப் பெற்றும் புதிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
மெக்கேஃப்ஸ்
மேலும் மெக் டொனால்ட்ஸ் இந்தியா தற்போது புதிய வாடிக்கையாளர்களைக் கவர மெக்கேஃப்ஸ் கிளைகளில் காஃபி போன்ற பல பானங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 45ஆக உள்ளது இதனை 140ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..