டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை சுமார் 14 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான 3 வறட்சி காலமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் உணவு பற்றாக்குறை எப்போது இல்லாத அளவிற்கு வரலாறு காணாத உயர்வை அடையும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தலைவர் ரத்தோர் கூறுகையில் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 12-14 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் இதன் அளவு 14 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2002, 2009ஆம் ஆண்டு நிலவிய வறட்சியை விடவும் தற்போது அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.