டெல்லி: ஜப்பான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சிறிய வகைக் கார்களைத் தயாரிக்கும் சுசூகி மோட்டார் கார்போரேஷன் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த 5 வருடத்திற்குள் 15 மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம் தனது மாருதி சுசூகி நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை எப்போது இல்லாத அளவிற்குத் தனது இந்திய கிளைக்குச் சுசூகி முக்கியத்துவம் அளித்து 5 வருடத்தில் 15 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி 2020ஆம் ஆண்டுக்குள்ள வருடத்திற்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கும் 15 மாடல் கார்கள் சிறு கார்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர வகையிலான கார்கள் பட்டியலில் இடம் பெறும் எனச் சுசூகி நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் தெரிவித்தார்.