டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் அதிகளவில் விரும்பிச் சாப்பிடும் மேகி நூடில்ஸில், மனிதன் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் அளவிற்கு அதிகமான ரசாயன பொருட்கள் உள்ளதால், மத்திய அரசு நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடில்ஸை இந்தியாவில் முழுமையாகத் தடை செய்தது.
மேலும் இந்நிறுவனத்தின் மீது மத்திய அரசு 640 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
இதனை எதிர்த்து நெஸ்லே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் இவ்வேளையில், இந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் 100 வருட வர்த்தகத்தைக் கொண்டாடி வருகிறது.
100 வருட வர்த்தகம்...
நெஸ்லே இந்தியா கடந்த 1912ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
இந்நிலையில் 100 வருட வர்த்தகத்தைக் கொண்டாடும் வகையிலும், மக்களிடம் மீண்டும் நன்மதிப்பைப் பெற 1.32 நிமிட வீடியோவை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வீடியோ..
இந்த வ4டியோவில் இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பயணத்தை விளக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்க்க கடைசி ஸ்லைடரை பார்க்கவும்.
முக்கியப் பொருட்கள்
இந்நிறுவனத்தின் மில்க்மெயிடு, நெஸ்கஃபே, மில்கிபார், கிட்கேட் மற்றும் நெஸ்லே பால் மற்றும் தயிர் போன்றவை இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவை.
மேலும் இந்நிறுவனம் இந்திய நாட்டின் சுதந்திரம் முதல் அப்துல் கலாம் இறப்பு வரை அனைத்தையும் பார்த்துள்ளது.
நெஸ்லே 100 வருடக் கொண்டாட்டம்
இந்த வீடியோவில் மேகி நூடில்ஸை நெஸ்லே சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.