மும்பை: உலகின் முன்னணி நிதியியல் மற்றும் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தனது இந்திய சந்தையின் மியூச்சவல் ஃபண்ட் வர்த்தகத்தை முழுமையாக, அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேபிட்டல் அசர்ட் மேனேஜ்மென்ட் (RCAM) நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மியூச்சவல் ஃபண்ட் சந்தையில் இருந்து கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியேறியுள்ளது.
இந்திய சந்தையில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் 12 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஆர்கேம் (RCAM) என்று அழைக்கப்படும் ரிலையன்ஸ் கேபிட்டல் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் 243 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் மியூச்சவல் ஃபண்ட் நிறுவனம் மத்திய அரசின் CPSE என்று சுருக்கமாக அழைக்கப்படும் Central Public Sector Enterprises வர்த்தக நிதியை முழுமையாக மேலாண்மை செய்ய உள்ளது.
இப்பரிமாற்றத்திற்காக இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பரிமாற்ற நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிவடையும் என ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஆர்கேம் (RCAM) நிறுவனம் செயல்படுகிறது.