டெல்லி: ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகியவை இணைந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் அளவை அதிகரித்ததற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களில் FPI எனப்படும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தை 15,000 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளனர்.
இப்புதிய அறிவிப்பு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு கடன் பத்திரங்களில் கூடுதலாக ரூ.16,431 கோடி முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவானது.
தற்போது அரசு கடன் பத்திர முதலீடு மதிப்பு வரம்பு ரூ.1,53,569 கோடியில் இருந்து 1,70,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 1ஆம் தேதி மீண்டும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு 16,600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.