மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மது விற்பனை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் 2015ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எந்த ஒரு இந்திய நிறுவனமும் பெற்றிடாத அளவிற்கு 9.3 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்றுள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் அதிகளவிலான பங்குகளில் பிரட்டன் டியாஜியோ முதலீடு செய்துள்ளதால், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் டியாஜியோ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
9.3 பில்லியன் டாலர் லாபமா??
டியாஜியோ தலைமையிலான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் 8.5 மில்லியன் பங்குகளை யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்திற்கு 8.7 பில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ததால், இந்நிறுவனத்தின் லாப அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.
விஜய் மல்லையா
யுனைடெட் புரூவரீஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 2012ஆம் ஆண்டுக்கு முன் விஜய் மல்லையா தலைமையில் இயங்கியது.
பங்கு விற்பனை
இந்தப் பங்கு விற்பனையின் மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாப அளவுகள் சுமார் 9.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவுகள் 5.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் மொத்த வருவாய் அளவும் 21.22 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
கடன் அளவு
இந்நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 53.23 பில்லியன் டாலரில் இருந்து 39.99 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மது வகைகள்
மேலும் இந்நிறுவனத்தின் மது வகைகள் எண்ணிக்கையை 150ஆக உயர்த்தவும், உயர் ரக மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனத்தின் சீஇஓ ஆனந்த கரிபாலு தெரிவித்தார்.
39 சதவீத சந்தை
இந்திய மதுபான விற்பனை சந்தையில் சுமார் 39 சதவீதத்தை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. மேலும் உலகளவிலான டியாஜியோ நிறுவன சந்தையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.