லண்டன்: அணு சக்தி துறையில் மட்டும் அல்லாமல் பிரிட்டன், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை, சைபர் செக்கியூரிட்டி போன்ற துறைகளிலும் இணைந்து செயல்படும் 9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தங்களில் இரு நாட்டு நிறுவனக்களும் கையெழுத்திட்டுள்ளது.
இதன் உடன் இங்கிலாந்தில் ரயில்வே ரூபாய் பத்திரங்களும் வெளியிடப் பிரட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டேவிட் கேமரூன்
9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அடுத்துப் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம், இனி இந்தியாவிற்கும் பிரட்டனுக்கு இடையே உள்ள நட்பு "new dynamic modern partnership" ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்,
அதுமட்டும் அல்லாமல் யுஎன் செக்கியூரிட்டி கவுன்சிலில் இந்தியா இடம் பெறும் எனவும் டேவிட் தெரிவித்தார்.
மோடி
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த சில மாதங்களாகவே லண்டனில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையிலும் பிரிட்டினில் பல நிறுவனங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
ரூ.100 கோடி மதிப்புள்ள பத்திரங்கள்
மேலும் மோடியின் மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த கொள்கைகளுக்கு இணங்க ரூபாய் மதிப்பிலான பத்திர விற்பனைக்கு ஆப்-ஷோர் தளமாகப் பிரட்டன் இருக்கும் எனவும் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
இதன் மூலம் அடுத்தச் சில மாதங்களில் இந்திய ரயில்வே துறை சார்பாகப் பிரட்டனில் ரூ.100 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட இந்திய முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
மேலும் வெள்ளிக்கிழமை காலையில் இரு நாட்டுப் பிரதமர்களும் சுமார் 90 நிமிடங்கள் நீடித்த ஆலோசனை நடத்தினர்.