டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து சேவை அளிப்பதில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகள் அனைத்தும் சன் டிவி நெட்வொர் தலைவர் கலாநிதிமாறனிடம் இருந்து அஜய் சிங் கைமாறிய பிறகு இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதிநிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்யும் செயலை நீங்களே பாருங்கள்.
விமானப் பயணிகள்
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விமானப் பயணிகள் எண்ணிக்கையின் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது திறமைக்கு ஏற்றவாறு விமானங்களை வாங்கி, சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.
150 எனக்கு.. 250 உனக்கு..
இந்நிலையில் கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் உலகில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத அளவிற்குச் சுமார் 250 விமானங்களை ஆர்டர் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு, இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்தேச சந்தைகளிலும் கடுமையான போட்டி அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற ஸ்பைஸ்ஜெட் தற்போது 150 விமானங்களை ஆர்டர் செய்யக் காத்துக்கிடக்கிறது.
ஸ்பைஸ்ஜெட்
இந்நிறுவனம் முடிவு செய்துள்ள 150 விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெரு மற்றும் மெட்ரோ நகரங்களுக்கான சேவையில் 100 பெரிய விமானங்களும், சிறு நகரங்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் 50 சிறு விமானங்களையும் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
அன்னிய முதலீடு
மேலும் நிறுவன வளர்ச்சிக்கான முதலீட்டைப் பெறுவதில் மத்திய அரசு அறிவித்துள்ள அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
லாபம்
அஜய் சிங் நிர்வாகத்தில் கடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனம் லாபத்தில் செயல்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை சரிவு.
பிற நிறுவனங்கள்
சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கும் இண்டிகோ நிறுவனம் ஏற்பஸ் நிறுவனத்திடம் சுமார் 430 விமானகங்களைப் பல பகுதிகளாக ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சுமார் 75 போயிங் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.