பெங்களூரு: 2015ஆம் நிதியாண்டில் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகள் உட்பட இந்தியாவில் அனைத்துத் தரப்பிலும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளது. ஆனால் இத்தகைய வேலைவாய்ப்புகளில் 70 சதவீதம் பணிகள் இந்திய அலுவலகங்களிலேயே முடங்கிப் போனது தான் இதன் சோகம்.
அமெரிக்க அரசு ஹெச்-1பி விசா வழங்குவதில் விதித்த கட்டுப்பாடுகள் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
நடப்பு நிதியாண்டில் ஆரக்கிள், விசா இன்க், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டிவிட்டர், உபர் போன்ற பல அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அதிகளவில் இதன் இந்திய அலுவலகங்களிலேயே பணி அமர்த்தப்பட்டுள்ளது.
கூகுள்
இதேபோல் எப்போது அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்களைப் பணியில் அமர்த்தும் கூகுள், இந்த வருடம் 3 மாத இன்டர்ஷிப் பெற்றவர்களை மட்டுமே நியமித்துள்ளது. அதிலும் முக்கியமான நபர்களை மட்டுமே அமெரிக்க அலுவலகப் பணியில் அமர்த்தியுள்ளது.
65,000 ஹெச்-1பி விசா
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு சுமார் 65,000 ஹெச்-1பி விசாக்களை வழங்கி வருகிறது. கடந்த இந்த 65,000 விசாக்கள் பெற சுமார் 1,75,000 விண்ணப்பங்கள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு விசா வழங்குவதில் குடவோலை முறையைப் பயன்படுத்தியது. அட அதுதாங்கள் குலுக்கள் முறை.
ஐடித்துறை
மேலும் அமெரிக்க அரசின் இந்தப் புதிய கட்டப்பாடுகளால் இந்திய ஐடித்துறை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின்
ஐஐடி டெல்லி
அமெரிக்காவில் பணியில் அமர்த்தப்படுவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஐடி டெல்லி கல்லூரி இந்த வருடம் 8 மாணவர்களில் 4 பேருக்கு மட்டுமே அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
சம்பளம்
மேலும் இந்திய ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் பணியில் அமர்த்தப்படும் மாணவர்களின் சம்பளம் கடந்த வருடத்தை விடச் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐஐடி கல்லூரிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.