டெல்லி: இந்தியாவில் துவண்டுபோன கப்பல் கட்டுமான துறையை மீட்டு எடுக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு புதிய கப்பல் கட்டும் தளங்களை வாங்குவதற்கும், நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பதற்கு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் சுமார் 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் இத்துறையில் நிலவும் கடுமையான நிதிப் பற்றாக்குறை குறைந்து வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும்.
மாஸ்டர் பிளான் அனில் ஜி.. கடைசி ஸ்லைடரை பாருங்க...
நிதியுதவி
நிதி தேவைக்காகக் காத்துகிடக்கும் இந்திய கப்பல் கட்டுமான நிறுவனங்கள் பெறும் புதிய ஆர்டர்களின் ஒப்பந்த விலையில் சுமார் 20 சதவீத தொகையைக் கடனாக அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய நிதி நெருக்கடியைத் தவிர்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிதியுதவியின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் குறையும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
முக்கியத்துவம்
இந்திய தொழிற்துறைகள் அனைத்தும் உலகப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாகச் செல்லும் இவ்வேளையில், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கும் கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புக் கவனத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிதியமைச்சகம்
இத்திட்டத்திற்கு நிதியமைச்சகம் நவம்பர் மாதத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு தான் லாபம்
இத்திட்டத்தின் மூலம் அனில் அம்பானி தற்போது கைபற்றி இருக்கும் பிப்பாவ் கப்பல் கட்டுமானத்துறை நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் உண்டு.
மாஸ்டர் பிளான் அனில் ஜி..
இது தான் ஆரம்பம்..
பிளான் ஸ்டாட்ஸ்
திட்டத்தின் அடுத்தக்கட்டம்
பழம் நழுவி பாலில் விழுந்த கதை
இது எக்ஸ்ட்ரா பிட்டிங்