மும்பை: 2015ஆம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சுமார் 70,173 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை ஒரு பகுதி கடன் சந்தையிலும், ஒரு பகுதி பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.
இதன் படி நடப்பு நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 70,173 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 23,843 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்திருந்தது எனச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் ஃபண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பின் தகவல்படி ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள்.
2015ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூடப் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்ததுள்ளது.