டெல்லி: இந்தியாவின் 43வது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் துவங்கினார்.
2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வெறும் நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் இந்திய ரயில்வே துறையைப் புதிய பரிணாம வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமையும் எனச் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
77 திட்டங்கள்
2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 77 திட்டங்களுக்கு அனுமதியுடன் 96,182 கோடி ரூபாய் மதிப்பிலான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பங்குச்சந்தை
ரயில்வே பட்ஜெட் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் BEML, சீமென்ஶ், ரிஸையன்ஸ் இன்பரா, ஏபிபி, எச்சிசி, எல் அண்ட் டி, டிம்கென், கன்டைனர் கார்ப் ஆஃப் இந்தியா போன்ற பல நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது.
7,000 கிலோமீட்டர்
ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் படி சுமார் 7,000 கிலோமீட்டர் தொலைவிலான ரயில்வே தடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ்
மேலும் ரயில்வே பயணிகளுக்குத் தங்களது பயணங்கள் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தை
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 69.86 புள்ளிகள் சரிந்து 23,019.07 புள்ளிகளை அடைந்துள்ளது, நிஃப்டி குறியீடு 32.70 புள்ளிகளை இழந்து 6,986.00 புள்ளிகளை எட்டியுள்ளது.