டெல்லி: இந்திய ரயில்வே துறையின் பரிமாண வளர்ச்சி திட்டத்தின் மூன்று முக்கியத் தூண்களைச் சுரேஷ் பிரபு வடிவமைத்துள்ளார்.
இதனைக் கொண்டு தான் இத்துறையில் உள்ள பிரச்சனைகள், இடர்கள், மற்றும் வருவாய் வசூல் என அனைத்துத் திட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாவ் அர்ஜன்: புதிய வருவாய்
ரயில்வே துறை வளர்ச்சிக்கு ஏதுவாக வருவாய் பெறும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து ரயில்வே துறையின் ஒவ்வொரு சொத்துக்களையும் பயன்படுத்த வேண்டும்.
நாவ் மனாக்: புதிய விதிமுறைகள்
ஜுரோ பட்ஜெட் முறையின் மூலம் நடப்பு நிதியாண்டின் நிதிநிலையை முழுமையாக எட்ட வேண்டும் என்ற இலக்குடன் இந்திய ரயில்வே துறை செயல்படும். மேலும் சர்வதேச தரத்திற்கு இணையாக வளர்ச்சி இலக்குகள் மற்றும் திட்ட முறைகளை வகுத்து நிலையான வளர்ச்சியைப் பெறும் வகையில் விதிமுறைகளை மாற்றியமைக்கப்படும்.
நாவ் சன்ராச்னா: புதிய வடிவம்
ரயில்வே துறையில் உள்ள பிரச்சனைகள் களை புதிய மற்றும் எளிமையான வழிகளைக் கண்டறிந்து இதனை உடனடியாக அமல்படுத்தப்படும். மேலும் ஒத்துழைப்பு, இணைப்பு, புதுமை மற்றும் முடிவுகளின் நிலையான தொடர்பு மற்றும் செயல்பாட்டில் புதுமையைப் புகுத்த வேண்டும்.