டெல்லி: நடப்பு நிதியாண்டில் ஒரு நாளுக்கு 7 கிலோமீட்டர் அளவிலான பிராட் கேஜ் வழிப்பாதை அமைக்கப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யதுள்ள இந்திய ரயில்வே துறை.
மேலும் திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் அகல ரயில்பாதை அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.
மின்வழிப் பாதை
2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்வழிப் பாதையை அமைக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகமாகும்.
ரூ.8.5 லட்சம் கோடி
அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த 8.5 லட்சம் கோடி ரூபாய்ச் செலவிடப்படும் என இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
மத்திய அரசு நிதியுதவி
நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு இந்திய ரயில்வே துறைக்குச் சுமார் ரூ. 40,000 கோடி வழங்க உறுதி செய்துள்ளது.
ரூ.30,000 கோடி இழப்பு
கடந்த வருடம் கச்சா எண்ணெய் விலை சரிவாலும், ரயில்வே கட்டண உயர்வாலும் பயணிகள் சேவையின் மூலம் சுமார் 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
இதனால் நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திட்டத்தில் எவ்விதமான கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை.