டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் 119 சதவீத அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2015ஆம் மாதம் முடிவில் நுகர்வோர் விலை குறியீடு- தொழிற்துறை ஊழியர்கள் அளவீடு 6.73 சதவீதமாக இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு பல கட்ட ஆலோசனைக்குப் பின் 119% என்ற அளவில் இருந்து 6 சதவீத உயர்த்தி 125 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி தெரிவித்துள்ளார். இந்த உயர்வு 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஒய்வூதியதார்களுக்குப் பயனளிக்கும். மேலும் இப்புதிய உயர்வு ஜனவரி 1,2016ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வருடத்திற்கு 2 முறை சில்லறை பணவீக்கத்தை மையமாகக் கொண்டு நிதியமைச்சகம் மாற்றியமைக்கும். இதற்கு முன் கடந்த வருடம் ஜூலை மாதம் 113 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 119 சதவீதமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.6 சதவீத உயர்வு
1 கோடி அரசு ஊழியர்கள்
ஜனவரி 1 முதல்...
நிதியமைச்சகம்