சோலார் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் சன்எடிசன் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் இருக்கும் சில சோலார் மின் உற்பத்தி தளங்களை அதானி குழுமம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
தனது நிறுவன திட்டங்களைச் செயல்படுத்தவும், நிறுவனத்தை மீட்டு எடுக்கவும் போராடி வரும் இந்த அமெரிக்கச் சன்எடிசன் நிறுவனத்திற்கு அதானி குழுமத்தின் முடிவு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
திவாலாகும் சன்எடிசன்
சமீப காலமாக உலகளவில் சோலார் மின் உற்பத்தியில் இறங்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் வகையில் சன்எடிசன் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் சில நிர்வாக மற்றும் உற்பத்தி பிரச்சனைகளால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளது.
இந்திய சந்தை
இந்திய சந்தையில் சன்எடிசன் நிறுவனத்திற்குச் சொந்தமான சில சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவிலான உற்பத்தியை எட்ட முடியாத நிலையில், அவற்றை விற்பனை செய்யச் சன்எடிசன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வாய்ப்புகள்
இந்தியாவில் சோலார் மின் உற்பத்திக்கு மத்திய அரசிடம் பல சலுகைகள் கிடைத்தாலும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்கச் சந்தையில் இருக்கும் 12 பில்லியன் டாலர் கடன் சன்எடிசன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது.
அதானி
இந்நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் சில சொத்துக்களைச் சன்எடிசன் நிறுவனம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
இதனை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதி அதானி குழுமம் இச்சொத்துக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்திய சந்தையில் சன்எடிசன் போன்று ஃபஸ்ட் சோலார் இன்க் மற்றும் சீனாவின் டிரினா சோலார் லிமிடெட் ஆகிய பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது.