மும்பை: வங்கிகள் தங்கள் வர்த்தகம் மற்றும் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான நிதித் தொகையைக் கடனாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.
இந்நிலையை மாற்றும் வகையில் ரிசர்வ் வங்கி கார்ப்பரேட்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் மூலம் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கும் வகையில் வரம்புக்கு அதிகமாக அளிக்கப்படும் கடன்களுக்குக் கூடுதலான வட்டியை வசூல் செய்யும் வகையில் புதிய விதிமுறையை ஆர்பிஐ அறிவிக்க உள்ளது.
ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகளவிலான கடன் அல்லது மிகப்பெரிய தொகையில் அளிக்கப்படும் கடன் மூலம் ஏற்படும் ஆபத்துகளைக் களைய ஆலோசனை நடத்தியது. அப்போது அதிக வட்டி வசூலிக்கும் திட்டத்தை முன்வைக்கப்பட்டது.
இப்புதிய விதிமுறை அடுத்த நிதியாண்டு அமலாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்திய வங்கிகளுக்கும் அதன் பன்னாட்டு கிளைகளுக்கும் பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதிவிக்குத் தகுதியற்றவர். நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கும், முக்கிய வர்த்தகத் துறைகள் சரிவைச் சந்தித்ததற்கும் ராஜனே காரணம். விரைவில் அவரைக் கவர்னர் பதவியில் இருந்து நீக்கி, ரிசர்வ் வங்கியின் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.