சென்னை: இந்தியா முழுவதும் 2 நாள் வங்கி வேலைநிறுத்த போராட்டம் என பெரும்பாலான வங்கித் துறை தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்து.
வங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான காரணம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பது மற்றும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயம் ஆக்குவது போன்றவற்றை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க வங்கித் துறை ஊழியர்கள் முடிவு செய்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் தலையீடு
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், ஜூலை 12, 13 ஆம் தேதி நடக்கவிருந்த வங்கி ஸ்ட்ரைக், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்
வங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவசரம் வேண்டாம் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ இணைப்பக்கு எதிரான எதிர்ப்பு
வங்கித் துறை தொழிற்சங்கம் எஸ்பிஐ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (SBP), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (SBM), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத் (SBH) வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பதை எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.