ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய தூண் என்று ரிலையன்ஸ் ரிடைல் துணை நிறுவனத்தைச் சொல்லலாம்.
இந்த நிறுவனத்தின் தங்க நகை விற்கும் ரிலையன்ஸ் ஜூவல்லரி வர்த்தகத்தில் இருந்து வெளியேறப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ரிலையன்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளியேறும் என்ன ஏதும் இல்லை
இதைத் தொடர்ந்து நேற்று ரிலையன்ஸ் ரிடைல் நிறுவன உயர் அதிகரி ஒருவரிடம் கேட்ட பொழுது ரிலையன்ஸ் குழுமத்திற்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லை என்றும் சமீபத்தில் தான் ஏழு ஸ்டோர்கள் புதியதாகத் திறந்ததாகவும் கூறியுள்ளார்.
50 கிளைகள்
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் தலைமையின் கீழ் சுமார் 50 கிளைகள் உள்ளது. மேலும் நான்கு ஸ்டோர்கள் திறப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பங்குதாரர்களுக்கு உறுதி
ரிலையன்ஸ் நிறுவனம் ரிடைல் வணிகத்தில் அதன் வணிகம் மற்றும் மதிப்பை உயர்த்தும் என அதன் பங்குதாரர்களுக்கு உறுதி அளித்துள்ளது.
முற்றிலும் வதந்தி
எனவே ரிலையன்ஸ் ஜூவல்ஸ் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தியே என்றும் கூறினார்.