உலகிலேயே அதிக கிளைகள் கொண்ட தபால் துறை இந்திய தபால் துறை தான். தபால் துறையில் ஏற்பட்டு வந்த மந்தமான சூழ்நிலையினால் தபால் துறை ஏடிஎம் சேவையை முதலில் துவங்கியது.
பின்னர் நீண்ட காலாமக வங்கி சேவையை துவங்க இருப்பதாகக் கூறிவரும் தபால் துறை இப்போது நிறுவனங்களின் பதிவாளர்களிடம் கூட்டிணைவு சான்றிதழ் பெற்றுள்ளதால் 2017 முதல் வங்கி சேவையை துவங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
800 கோடி ரூபாய் முதலீட்டில் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் சுமார் 650 வங்கி கிளைகளும் 5000 ஏடிஎம் மையங்களும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பாங்க் (ஐபிபிபி - IPPB) துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் தபால் துறையினால் இந்தியாவில் 1,54,000 தபால் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்க முடியும். மேலும் இதில் பெரும்பாலான கிளைகள் கிராமப் புரங்களில் உள்ளதும், இதனால் கிராமங்களில் எளிதில் கிராமப்புறங்களில் வங்கி சேவைகள் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.