இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் கடன் சந்தையில் மசாலா பத்திரங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி ஹெச்.ஆர் கான் தலைமையிலான குழுவின் பல்வேறு பிரிந்துரையின் அடிப்படையில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ.
மேலும் இந்திய சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிக் கடனுக்காகப் பிணை உத்தரவாக அரசு பத்திரங்கள், கார்பரேட் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களையும் பணப்புழக்க விகித சரிபார்ப்பு விதியின் கீழ் ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இதனுடன் கார்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யவும், விற்பனை செய்யவும் புதிய மின்னணு தளத்தை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
அதேபோல் கார்பரேட் பத்திரங்கள் மற்றும் மசாலா பத்திரங்களில் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வகையில் NDS-OM தளத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்தப் புதிய முயற்சியின் முதன் நாட்டின் உள்கட்டுமான மற்றும் மலிவான மனைகள் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கியும் நம்புகிறது.