மும்பை: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் செயற்படா நிர்வாகத் தலைவராகச் சுந்தகம் கிலேடான் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் மற்றும் பிராமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிராமல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பணிக்காலம் வியாழக்கிழமை முதல் துவங்கியதாக டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் இணையதளத் தகவல்கள் படி டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் சைரஸ் மிஸ்திரி, ஈஷான்த் மிஸ்திரி, டாக்டர்.நித்தின் நோஹிரா, விஜய் சிங்ஷ பார்தியா கம்பட்டா மற்ரும் ராநேந்திரா சென் ஆகியோர் உள்ளனர்.
டாடா குழுமத்தின் கீழ் உலக நாடுகளில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.