டெல்லி: ரயிலில் பயணம் செய்வதை மேலும் எளிமையாக்க விரல் நுனியில் தட்டிக் கொண்டே ரயில் டிக்கெட், உணவு எனப் பயணிகளின் தேவைக்கான அனைத்துச் சேவைகளையும் அளிக்கக் கூடிய செயலியை இந்தியன் ரயில்வேஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ரயில் பயணத்தில் உள்ள அனைத்துச் சேவைகளை ஒருங்கிணைத்து இருக்கும் இந்தச் செயலியில் ட்க்கெட் புக் செய்வது, டாக்ஸி புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது, போர்ட்டர் (சுமை துக்கனருக்கு கோரிக்கை விடுப்பது), காத்திருப்பு றையை புக் செய்வது, படுக்கை விரிப்பானுக்குக் கோரிக்கை விடுப்பது, ரயில் பெட்டியின் தூய்மை குறித்து புகார் அளிக்க, பொழுதுபோக்கு அம்சங்கள், ஓட்டல் அறை புக் செய்வது, விமான டிக்கெட் புக் செய்வது, டிக்கெட் காத்திருப்பை சரிபார்ப்பது, டிக்கெட் ரத்து செய்வது என அனைத்தும் இந்தச் செயலியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இயர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன இந்தச் செயலியை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை மூன்று நிலைகளாகப் பெற்றுள்ளது. அதில் மருத்துவ வசதிகள், காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் வசதி, பார்க்கிங் வசதிகள் போன்றவற்றையும் ஏற்படுத்த உள்ளனர்.
இது போன்ற டிஜிட்டல் முறையில் ரயில்வே துறையை முன்னேற்றுவதால் ஆண்டுக்கு 500 கோடி வரை லாபம் பெற இயலும் என்று ரயில்வே நிர்வாக எதிர்பார்க்கிறது.
அன்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றுவதன் மூலம் 10-20 சதவீதம் வரை வருமானத்தைப் பெருக்க இயலும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.