மத்திய அரசு டிசம்பர் 15-க்கு பிறகு காலாவதியான ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க எந்தக் கால நீட்டிப்பு கொடுக்காததால் நாளை நள்ளிரவுடன் செல்லாது.
வங்கிகளில் மாற்றலாம்
பழைய 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கவே செல்லாத நிலையில் வங்கிகளில் மட்டும் மாற்றிக்கொள்ளலாம். அதே போன்று பழைய 500 ரூபாய் நோட்டுகளையும் நாளை நள்ளிரவுக்குப் பிறகு வங்கிகளில் மட்டுமே மாற்ற இயலும்.
எங்கெல்லாம் பயன்படுத்த முடியாது
அப்படியானால் நாளை மறுநாள் முதல் மருந்தகங்கள், மருத்துவமனைகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள், ரயில் கட்டணங்கள் போன்றவற்றுக்குப் பழைய 500 ரூபாய் செல்லாது.
நவம்பர் 8 அறிவிப்பு
நவம்பர் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பை மோடி அறிவித்த போது அடுத்த 72 மணி நேரம் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. பின்னர் இந்தக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை பிரபலப்படுத்தி வரும் மத்திய அரசு அவற்றுக்குப் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் சலுகைகள்
இதன் மூலம் ரயில் கட்டணங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் சலுகைகள் மற்றும் சேவை வரி ரத்து போன்றவற்றை அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கார்டுகள் பயன்படுத்தி 2,000 ரூபாய் வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குச் சேவையை வரியை முழுமையாக ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.