செல்லா ரூபாய் நோட்டுகளை அறிவித்ததில் இருந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில் 4,313 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணமாக பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
பரிமுதல் குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த வரையில் 4,313 கோடி ரூபாய் பணமாகவும், 554.6 கோடி ரூபாய் தங்கமாகவும் வருமான வரித்துறையினால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.
எத்தனைச் சோதனைகள்
வருமான வரி துறையினர் நவம்பர் 8-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிவர்த்தனைகளைக் கண்காணித்து தொடர்ந்த 1,061 சோதனைகள் செய்துள்ளதாகவும் கூறினர்.
நோட்டிஸ்
வருமான வரி துறையினர் வரி ஏய்ப்பு, ஹவாலா பரிவர்த்தனை போன்றவற்றிற்காக 5,058 நோட்டிஸ்கள் அனுப்பி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
புதிய ரூபாய் நோட்டுகள்
வருமான வரி துறையினர் இது வரை பரிமுதல் செய்யப்பட்ட தொகையில் பெறும் 106.89 கோடி ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளதாகவும் இதில் பெறும் பகுதி 2000 ரூபாய் நோட்டுகள் எனக் கூறப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் ஆபரண தங்கம் அல்லாமல் பொன்னாக 91.99 கோடி ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழக்குகள்
கருப்புப் பணம் வைத்திருந்ததாக 487 வழக்குகள் சிபிஐ மற்றும் நிதி வழக்குகளைக் கவனித்துக்கொள்ளும் நிறுவனங்களில் டிசம்பர் 29-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க: