2017-2018 ஆண்டிற்கான பட்ஜெட் கோப்புகள் அச்சிடும் பணி இன்று அல்வா கிண்டுவதுடன் துவங்குகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அல்வா விழாவில் பங்கேற்பார்.
பட்ஜெட் கூட்டம் துவங்கும் முன்பு சடங்காக மிகப் பெரிய தவாவில் அலவா கிண்டுவது வழக்கம்.
இனிப்பாக அல்வா
பட்ஜெட் உருவாக்க உதவிய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கோப்புகள் அச்சிடும் முன்பு நிதி அமைச்சர் அல்வா அளித்து அதாவது இனிப்பாக அல்வாவை அளித்து துவங்கி வைப்பார்.
எதற்காக அல்வா
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மூன்றாவது முழுமையான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அல்வா விழா நடத்துவதற்குக் காரணம் பட்ஜெட்டின் இரகசியத்தைக் காப்பதற்காகவே ஆகும்.
ரகசியம் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றது?
பட்ஜெட் கூட்டத்திற்கான பணிகள் துவங்கிய உடன் அதற்காகப் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் தங்களது குடும்பத்தைக் கூடத் தொடர்புகொள்ள முடியாது. சில மூத்த அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் மட்டும் வீட்டிற்குச் சென்று வர அனுமதி உண்டு.
ஊழியர்கள் எண்ணிக்கை
பட்ஜெட் கோப்புகளை அச்சிடும் போது 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிவார்கள்.