பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு எவ்வளவு கள்ள பணம் சிக்கியது என்ற ஆர்டிஐ மனு ஒன்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது.
அந்தக் கடிதத்திற்கு என்ன பதில் ஆரிபிஐ அளித்திருக்கும் என்று நினைக்கின்றீர்கள். எங்களுக்குத் தெரியாது. முழு விவரங்களுக்குத் தொடர்ந்து படிக்கவும்.
ஆர்டிஐ ஆர்வலர்
ஆர்டிஐ ஆர்வலர் அனில் வி கல்கலி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு எவ்வளவு கள்ள பணம் சிக்கியது என்று ஆர்டிஐ மனு ஒன்றை ஆர்பிஐ வங்கிக்கு அனுப்பி உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் பதில்
கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ எங்களிடம் இப்போது உறுதியான தகவல் இல்லை என்றும் பதில் அளித்துள்ளனர்.
ஆர்டிஐ ஆர்வலரின் கேள்வி
கல்கலி முக்கியமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு கள்ள பணத்தின் மதிப்பு எவ்வளவு என்றும், நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை எந்த வங்கியில் அதிகக் கள்ளப்பணம் சிக்கியது கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்புத் தோல்வி
7 வாரங்கள் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று இன்று வரை மூன்று வாரங்கள் ஆன பிறகும் சரையான தரவு இல்லை என்று பதில் வரும் நிலையில் கள்ள பணத்தை ஒழிக்கத்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிக்கப்பட்டது அரசின் தோல்வியைத் தான் காட்டுகின்றது என்று கல்கலி கூறியுள்ளார்.
மோடியின் அறிவிப்பு
பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது இது கள்ள பணத்தையும், தீவிர வாதத்திற்கு எதிராகப் போராடவும் ஆயுதமாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
யார் பதில் அளிக்க வேண்டும்?
எனவே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு எவ்வளவு காள்ளப்பணம் பிடிபட்டது என்று மோடி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஆர்டிஐ ஆர்வலர் கல்கலி கூறியுள்ளார்.