வரலாறு காணாத வகையில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் ஊரக வளர்ச்சிக்காக இந்திய கிராம புறங்களில் நாள்தோறும் 133 கிலோமீட்டர் தொலைவிற்குச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்துக் கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்க உறுதி செய்துள்ளது.
இதனைக் குறித்த நேரத்தில் சரியான வளர்ச்சியை உறுதி செய்யக் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,223 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஊரக வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி செய்துள்ளார்.
கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.