ஆஷிஷ் ஹேம்ரஜனி: வயது 42
பதவி:
புக்மைஷோ நிறுவனத்தின் சி.இ.ஓ
கல்வி:
மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.பிஏ
விருப்பம்
நீந்துவது, கடற்பயணம், ஜிம் ஆகியவை இவரது முக்கியப் பொழுதுபோக்கு
துவக்கம் முதல் வெற்றி வரை:
கடந்த 1999ஆம் ஆண்டு இவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள வானொலி ஒன்றில் ஆன்லைனில் ரக்பி போட்டியின் டிக்கெட்டுக்களைப் பதிவு செய்வது குறித்த விளம்பரத்தைக் கேட்டார். அப்போதுதான் இதை இந்தியாவில் செயல்படுத்தலாம் என்ற ஐடியா அவருக்கு வந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு பணியை வாடிக்கையாளருக்கு முடித்துக் கொடுக்கும் பிசினஸை அவர் தொடங்க முடிவு செய்தார்.
அவருக்கு உறுதுணையாக ராஜேஷ் பால்பாண்டே மற்றும் பரிக்ஷித் டார் ஆகியோர் இணை நிறுவனர்களாகச் சேர்ந்தனர். இவர்களுடைய முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டதுதான் பிக்ட்ரீ எண்டர்டெயின்மெண்ட் பிரைவைட் லிமிடெட், பின்னர் இந்நிறுவனம் புக்மைஷோ என்று மாறியது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் தொலைப்பேசி மற்றும் இண்டர்நெட்டை பயன்படுத்தி டிக்கெட்டுக்களை வழங்கி வந்தன. ஆரம்பத்தில் ரூ.2.5 கோடி முதலீடு செய்த இந்நிறுவனம் தற்போது ரூ.3000 கோடி அளவுக்கு மிகப்பெரிய ஆலமரமாகப் பெருகியுள்ளது.