மொஹித் பட்நாகர்: வயது 47
யார் இவர்:
சீக்கோயா கேபிடல் நிறுவனத்தின் எம்.டி
கல்வி:
விரிஜினா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் எம்.எஸ்.சி மற்றும் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ
விருப்பம்:
ராயல் என்பீல்டில் பயணம் செய்வது, கால்பந்து விளையாடுவது இவரது முக்கியப் பொழுதுபோக்கு
இவரது சிறப்பு:
இந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் மிகப்பெரிய மூலதன நிறுவனங்களில் ஒன்று சீக்கோயா கேபிடல். பட்நாகரின் முயற்சியால் இவரது நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
இதற்கு முன்னர்ப் பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து அனுபவம் பெற்றவர். ஆரம்பக் காலத்தில் இவருடைய முயற்சியால் $2 பில்லியன் அளவுக்கு முதலீடு குவிந்தது.
இந்த முதலீட்டில் இன்னும் $900 மில்லியன் அப்படியே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்நிறுவனம் தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தவறிவிட்டது. சிட்ரஸ் பே மற்றும் குவிக் ஹீல் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் சீக்கோயூவா நிறுவனத்தை வெளியேற்றிவிட்டது என்றே சொல்லலாம்.