பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத வகையில் பல மாற்றங்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
தனிநபர் 2.5 லட்சத்திற்கு மேல் 5 லட்சத்திற்குள் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு 50 சதவீத வரி சலுகையைப் பட்ஜெட் அறிக்கையில் கொடுக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை.
மேலும் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்ட பிற திட்டங்களுக்கு நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயர்த்தும் வகையிலும் இல்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வை ஈடுகட்டும் வகையில் மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில் பட்ஜெட் அறிக்கை குறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு செய்தது. வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்குகளைப் பதிவு செய்த 2,100 பேரில் 60 சதவீதம் பேர் பட்ஜெட் அறிக்கையைச் 'சுத்த வேஸ்ட்' என்ன தெரிவித்துள்ளனர்.
29 சதவீதம் பேர் அதாவது 605 பேர் ஏதோ பரவாயில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிஸல் அருண் ஜேட்லி தாக்கல் செய்த படஜெட் அறிக்கை மிகச் சரியான பட்ஜெட் என்று ஆதரவு தெரிவித்துள்னர்.
நீங்களும் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய இதைக் கிளிக் செய்யவும்.