டெல்லி: இந்திய தனது ஆயுத படையை முழுமையாகத் தயார் நிலைக்குக் கொண்டு வரும் திட்டதித்ல இறங்கியுள்ளது. கடந்த 3 மாதத்தில் இந்திய அரசு அவசரக் கால அடிப்படையில் குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் முக்கியமான உதிரிப் பாகங்கள் எனச் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கிக் குவித்து வைத்துள்ளது.
மேலும் துரித நேரத்தில் வீரர்கள், டேங்குகள், போர்கப்பல்கள், போர் விமானங்கள் என அனைத்தையும் தயார்படுத்தும் பணிகளும் முப்படையும் நடந்து வருகிறது.
எதற்காக 20,000 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுத கொள்முதல்..?
10 நாள் போர்
2016, செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த உரி தாக்குதலுக்குப் பின் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படையும் குறைந்தது 10 நாட்களாவது தொடர்ந்து முழுமையான போர் செய்யும் அளவிற்கு ஆயுதங்களையும் அதன் தேவைகளையும் பூர்த்திச் செய்ய முடிவு செய்துள்ளது.
ஒப்பந்தங்கள்
ஆயுத மற்றும் வெடிபொருட்கள் தேவையைக் கடந்த 3 மாதத்தில் இந்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் அவசரக் கால ஒப்பந்த முறையில் வெடிபொருட்கள் வாங்கியுள்ளது.
எதிர் தாக்குதல்
இந்திய ராணுவம் உரி தாக்குதலுக்கு எதிராகக் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்திற்குள் தடலடியாக நுழைந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்று குவித்தனர்.
இதன்பின் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளிலும், தனித்தனியாக அதிகாரம் கொள்முதல் குழுக்களை அமைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பாதுகாப்பு நிலையை உறுதிப் படுத்துவதற்காகச் சில முக்கிய அவசரக்கால நிதிகளையும் அளித்துள்ளது.
இந்திய விமானப் படை
இந்நிலையில் இந்திய விமானப் படை கடந்த 3 மாதங்களில் 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 43 ஒப்பந்தங்களைச் செய்துள்ளது, இதில் சுகோய் 30MKI விமானம், மீரேஜ் 2000, எம்ஐஜி 29, ஐஎல் 76, ஐஎல் 78, பால்கான் AWACS ஆகியவற்றை வாங்க உள்ளது.
இந்திய ராணுவம்
ரஷ்ய நிறுவனங்களுடன் மட்டும் இந்தியா சுமார் 5,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பல ஏவுகணையை வாங்க முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு
இந்நிலையில் இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய அரசும் நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.