இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் (NPCI) பிப்ரவரி மாதம் இறுதிக்குள் அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் பிம் எனப்படும் பிஎச்ஐஎம் சேவையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிஎச்ஐஎம் சேவை அனைத்து வங்கிகளுக்குமான ஒன்றிணைக்கப்பட்ட உதவியுடன் எளிதான, சுலபமான மற்றும் விரைவான பரிவர்த்தனை சேவையை யூனிபைட் கொடுப்பனவுகள் இடைமுகம் (யுபிஐ) பயன்படுத்தி அளிக்கும்.
இணைந்துள்ள வங்கிகள்
பொதுத் துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆ பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் 37 வங்கிகள் பிஎச்ஐஎம் சேவையில் இணைந்துள்ளன.
இணைய இருக்கும் வங்கிகள்
கார்ப்ரேஷன் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஐந்து கூட்டணி வங்கிகள் போன்றவை விரைவில் பிஎச்ஐஎம் சேவையில் இணைய உள்ளன.
இணைக்கும் பணி
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் (NPCI) இந்த ஏழு வங்கிகளையும் பிஎச்ஐஎம் செயலியுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது என்றும் அதற்கான பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறுகின்றது.
பயனர்கள் அதிகரிக்க வாய்ப்பு
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்தப் பொதுத் துறை வங்கிகள் பிஎச்ஐஎம் சேவையில் இணையும் போது பிஎச்ஐஎம் செயலியில் பயனர்கள் அதிகரிப்பார்கள் என்று இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் (NPCI) தலைமை செயல் அதிகாரி ஏ.பி.ஹோடா கூறியுள்ளார்.