மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பழைய கம்பளி ஸ்வெட்டர்ஸ் மற்றும் மற்றும் பயன்படுத்தப்படும் துணி பொருட்களில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஒரு குடும்பச் சேர்ந்த, 45 வயதான ஜெய்தீப் சச்தே, ஹோட்டல்களில் உபயோகப்படுத்திய பழைய படுக்கை விரிப்புகள் மற்றும் மேஜை விரிப்புகளைப் பயன்படுத்தி ஆடம்பரமான துணி பைகளை உருவாக்கலாம் என்று யோசித்தது ஆச்சரியம் இல்லை. இது அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் கிடந்த படுக்கை விரிப்புகளைப் பார்த்து அதில் சில பயனுள்ள விஷயங்களைச் செய்ய ஏன் செய்யக்கூடாது என்று நினைத்தார். பிவாண்டியில் அமைந்துள்ள, தனது தொழிற்சாலையில் அமர்ந்து, அனைத்து அளவுகள் மற்றும் வடிவங்களில் அமைந்த வண்ணமயமான துணி பைகளின் குவியல்களால் சூழப்பட்டு,தையல்காரர்கள் தங்கள் இயந்திரங்களைத் தயார் செய்ய அவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்தினர். இவ்வாறு உருவானது தான் இந்தத் தொழில்.
இந்த யோசனை ஒரு முழுமையான வணிக வடிவத்தை எடுத்தது. ஆண்டுதோறும் இந்த வணிகத்தின் விற்று கொள்முதல் ரூ 4 கோடி. முதல் ஆண்டு (2011-12) விற்று கொள்முதல் ரூ 50 லட்சமாக இருந்தது. அதன் பின்னர் எட்டு மடங்கு ஜெய்தீப் இந்தத் தொழிலால் வளர்ச்சியடைந்தார்.
பரவசமடைய முக்கியக் காரணம்
ஜெய்தீப் இந்த வணிகத்தை விடப் பரவசமடைய முக்கியக் காரணம் என்னவென்றால் அவரது நிறுவனம் மகத்தான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் தங்களது நிறுவனமான "டெக்ஸ் கூல் பிரைவேட் லிமிடேட் " இருந்து உருவான "ஆதெண்டிக் இம்பாக்ஸ்" என்ற இந்தத் துணை நிறுவனம் குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியை அடைந்து விட்டது.
சுற்றுச் சூழல்
"உலகளாவிய இயற்கை நிதியத்தின் கருத்துப்படி 70 கிராம் எடையுள்ள ஒரு துணி பை செய்யத் தண்ணீர் 1,000 லிட்டர் தேவைப்படுகிறது. மற்றொரு புள்ளிவிவரம் துணி ஒரு கிலோ உற்பத்தி செய்தால் வளிமண்டலத்தில் அது கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை, 7 கிலோ வெளியேற்றுகிறது என்று கூறுகிறது.
மேற்கூறிய இந்த மதிப்பீட்டின்படி , மறு சுழற்சி செய்யப்பட்ட துணிகளின் மூலம் நாம் இதுவரை 2.2 பில்லியன்( அதாவது 220 கோடி லிட்டர்) லிட்டர் தண்ணீரையும் , கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடு 1.1 பில்லியன் கிலோ அளவிற்குக் குறைக்கப்பட்டும் இருக்கிறது என்கிறார் ஜெய்தீப்.
ஐ ஆம் நாட் வெர்ஜின்
' ஆதெண்டிக் கிரீன்' மற்றும் 'நான் ஒரு கன்னி பொருள் அல்ல' அல்லது 'நான் மிகவும் வீணாகியவன்,' என்ற பிராண்ட் அடையாளங்களோடு தங்கள் தயாரிப்புகளான - ஷாப்பிங் பைகள், மேஜை பாய்கள், மெத்தை கவர்கள், கை பைகள் மற்றும் கவண் பைகள் முதலியன - சூப்பர் மார்கெட்டுகளான பிக் பஜார், ஹைப்பர் சிட்டி, டி மார்ட், மற்றும் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இவை ரூ 29 ல் இருந்து ரூ 450 இடையே வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.
தற்போது, அவர்கள் 20 டன் பழைய துணிகளை ஒவ்வொரு மாதமும் மறு சுழற்சி செய்கிறார்கள். இதன் மூலம் 100,000 மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. ஆனால் இந்தச் சந்தைக்கு விரிவாக்கம் மற்றும் மாபெரும் வளர்ச்சிக்கான எதிர்காலம் உள்ளது.
படுக்கை விரிப்புகள்
"அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுமார் 2.2 கோடி ஹோட்டல் அறைகள் தங்கள் படுக்கை விரிப்புகள் மற்றும் மற்ற துணி பொருள்களைச் சராசரியாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுகின்றன. ஆனால் தற்போதைய கணக்கின் படி நாம் சந்தையில் எடுப்பது 4 அல்லது 5 சதவீதம் கூட இல்லை, "என்கிறார் ஜெய்தீப் .
இந்தத் துறையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இருப்பதால், பழைய ஹோட்டல் துணிகளை அகற்றும் துணி சலவை செய்பவர்களிடம், இருந்து பொருள்களை எடுப்பதற்காக ஒரு வலுவான நெட்வொர்க்கை அமைத்திருக்கிறார்.
பொருட்கள் கொள்முதல்
முக்கியமாக நாம் அமெரிக்கச் சந்தையில் பொருள்களைக் கொள்முதல் செய்கிறோம். ஹோட்டல்கள்கள் விரிப்புகளை அங்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மாற்றுகின்றன. படுக்கை விரிப்புகள் பொதுவாகப் பருத்தியால் செய்யப்படுகின்றன, ஆனால் மேஜை விரிப்புகள் செயற்கை இழைகளால் உருவாக்கப்படுகின்றன.
இந்தப் பழைய துணிகளை வாங்கக்கூடிய செலவு மிகவும் குறைவே. ஆனால் ஆனால் பழைய விரிப்புகள் ஒரு கிலோ ஒரு டாலருக்கு வாங்கப்படுகின்றன. மறு சுழற்சி செய்ய ஆகும் செலவில் முக்கியமாகத் தொழிலாளர் ஊதியம் மற்றும் செயல்முறை செலவு மிகவும் அதிகம்.
செய்யும் முறை
தொழிற்சாலையில் முதலில் துணி பொருட்கள் நாப்தலீன்(ரச கற்பூரம்) கொண்டு உலர் சலவை செய்யப்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் ஏதேனும் இருந்தால் அழிப்பதற்கு உதவியாக இருக்கும்.
பின்னர், ஆடைகள் பல்வேறு பொருட்கள் செய்வதற்காகப் பல்வேறு அளவுகளில் வெட்டப்படுகின்றன. பெரும்பாலான இவர்களுடைய தயாரிப்புகள் வெள்ளை அல்லது வெள்ளை நிறம் சார்ந்து உள்ளன, எனவே நாங்கள் எங்கள் தயாரிப்புகளுக்கு ஒரு சமமான தோற்றம் அளிக்க முடியும்," ஜெய்தீப் கூறுகிறார்.
டிசைன்ஸ்
கவர்ச்சிகரமான டிசைன்ஸ் டிஜிட்டல் முறை மூலம் பொருட்கள் மீது அச்சிடப்படுகின்றன. இவை அழகிற்கு மாத்திரம் அல்ல, துணி மீது உள்ள குறைபாடுகளை உதாரணமாகக் கறை போன்றவற்றை மறைக்க உதவுகின்றன.
உலகக் கோப்பை ஐகானை அச்சிடுவதற்கான உரிமை
ஆதெண்டிக் நிறுவனம் மேட்டல் நிறுவனத்திடம் இருந்து பார்ப்பிப் பொம்மை படங்களைத் தங்கள் பொருட்களின் மேல் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிடுக்கிறது. அது போல் வரையறுக்கப்பட்ட 15,000 பைகள் மேல் 2011ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை ஐகானை அச்சிடுவதற்கான உரிமையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து பெற்றது.
துவக்கம்
ஜெய்தீப் தனது குடும்ப நிதியில் இருந்து ரூ .15 லட்சம் முதலீட்டில் வெறும் 12 பேர்களுடன் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் இப்போது அந்நிறுவனத்தில் 60 பேர் பணியாற்றுகின்றனர்.
முன் அனுபவம்
ஏற்கனவே ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த ஜெய்தீப் ஒரு சில லட்சங்களை இழந்தார். ஆனால் இப்போது தான் செய்து வரும் இந்தத் தொழிலில் அடுத்தத் தலைமுறைக்கு உதவும் சுற்று சூழலுக்கு உகந்த ஒரு தொழிலை செய்வதில் அவருக்குத் தார்மீக திருப்தி ஏற்பட்டுள்ளது.
குடும்பம்
வீட்டில், அவரது குழந்தைகளான, ஷனாயா, 16 மற்றும் ஷிலோகா, 15 வயதாகும் இவர்களிடத்தில், இளைய தலைமுறை மீது புதிய வடிவமைப்புகளைத் தாக்கத்தை மதிப்பிட அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
"நான் தீவிரமாக இவர்களுடைய பரிந்துரைகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுப்பேன்". ஏனென்றால் அது எனது தொழிலை முக்கியமாக வேடிக்கையாகவும், நாகரீகமாகவும் முக்கியமாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் விரிவுபடுத்த உதவுகிறது என்று அவர் கூறுகிறார்.
மனைவி
அவரது மனைவி ரேகாவும் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அவர் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கையாளுகிறார் மற்றும் அவர் தான் வர்த்தகத் தலைவர் ஆவார். அவர் ஒரு திறமையான தொழில் வல்லுநர். ஒரு தாயாகவும் மற்றும் தொழிலிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார் என்று பெருமையடைகிறார் ஜெய்தீப்.
பொழுதுபோக்கு
ஜெய்தீப்பிற்குக் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உண்டு. முறையே செயின்ட் ஜோசப் பள்ளி, கொலாபா, மற்றும் சிடன்ஹெம் கல்லூரியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி அணிகளுக்காகக் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
ஒரு காமர்ஸ் பட்டதாரியான ஜெய்தீப், கிரிக்கெட் கிளப் இந்தியாவின் ஒரு குழு உறுப்பினரும் ஆவார் மற்றும் மிகவும் வார இறுதிகளில் பிராபோர்ன் மைதானத்தில் இவர் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும்.