‘ஆதார் கார்டு’ வெற்றி அடைந்த கதையை மைக்ரோசாப்ட் சிஇஓ உடன் பகிர்ந்து கொண்ட நந்தன் நிலேகனி!

‘ஆதார் கார்டு’ வெற்றி அடைந்த கதையை மைக்ரோசாப்ட் சிஈஓ உடன் பகிர்ந்து கோண்ட நந்தன் நிலேகனி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரில் திங்கட்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான சத்ய நாதெல்லா.

 

அந்த நிகழ்வில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய நந்தன் நிலேகனியும் பங்கேற்றார். அப்போது இரண்டு டெக் ஜாம்பவான்கள் இடையில் நடந்த உரையாடலில் பிற இண்டெர்னெட் பயன்பாடுகளைக் காட்டிலும் ஆதார் கார்டு திட்டம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றிப் பெற்றது அதன் பார்வை என்ன என்று சத்ய நாதெல்லா கேட்ட கேள்வியை அடுத்து நந்தன் நிலேகனி ஆதார் அட்டையின் பார்வை குறித்து விளக்கினார்.

வேகம் மற்றும் அளவில் கவணம்

வேகம் மற்றும் அளவில் கவணம்

ஆதார் கார்டு திட்டத்தை முடிவு செய்த உடன் முதலில் அதன் வேகம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு வடிவமைத்தோம். வேகம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு வடிவமைக்கவில்லை என்றால் இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்து இருக்கும்.

இரண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி மாற்றம்

இரண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி மாற்றம்

அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்ற போது இரண்டு கட்சிகள் மாறி ஆட்சியைப் படித்தது. ஆனால் இரண்டு அரசுகளும் எங்களுக்கு இந்தத் திட்டத்திற்காக நல்ல ஆதரவை அளித்தன.

யார் இந்த நந்தன் நிலேகனி?
 

யார் இந்த நந்தன் நிலேகனி?

டெக் ஜாம்பவானான நந்தன் நிலேகனி இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்தியா தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். இப்போது அரசின் ஆலோசகராகவும் உள்ளார்.

நல்ல முன்னேற்றம் அடைந்த காலம்

நல்ல முன்னேற்றம் அடைந்த காலம்

ஆதார் திட்டம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தான் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும், 5 வருடத்தில் 1 பில்லியன் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளதாகவும் கூறினார்.

பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்

பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்

ஆதார் செயலியை உருவாக்கும் போது நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காகப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (APIs) பல விஷயங்களுக்குப் பயன்படும் வகையில் அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனிநபர் அடையாளம்

தனிநபர் அடையாளம்

முதலில் உருவாக்கும் போது எந்த ஒரு சாதனத்தை வைத்தும் பையோமெட்ரிக் மூலமாகத் தனிநபர் அடையாளம் போன்றவற்றைப் பார்க்க மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும், பின்னர் வங்கிகள் மற்றும் சிம் கார்டுகளுக்கான வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பெறும் விதமாகவும் மாற்றி அமைத்ததாகவும் நிலேகனி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ பற்றிப் பேசிய நந்தன் நிலேகனி ஆதர் சார்ந்த வாடிக்கையாளர் விவரங்களைச் சரி பார்க்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்தத் துவங்கியதினால் அதன் வாடிக்கையாளர்களை வேகமாகச் சேர்க்க உதவியதாகவும் கூறினார்.

வாடிக்கையாளர் விவரங்களை எளிதாகப் பெற இயலும்

வாடிக்கையாளர் விவரங்களை எளிதாகப் பெற இயலும்

வாடிக்கையாளர்கள் விவரங்கள் பற்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிந்துகொள்ள முகேஷ் அம்பானி எடுத்த முயற்சியினால் அவர்களால் எளிதாக 70 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது. இது முற்றிலும் ஆதார் சார்ந்த வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரி பார்க்கும் சேவையினால் தான் என்றும், இரண்டு முதல் மூன்று நிமிடத்தில் ஒரு வாடிக்கையாளரின் விவரங்களை உள்ளிட முடியும் என்றும் தெரிவித்தார்.

5 பில்லியன் சேமித்த அரசு

5 பில்லியன் சேமித்த அரசு

ஆதார் தொழில்நுட்பத்தினால் அரசு 5 பில்லியன் வரை சேமித்துள்ளது. அரசு இதனை நல்ல முறையில் பயன்படுத்தும் போது இன்னும் அதிகமான பயனை பெறும் என்றும், தனியார் துறைக்கு வாடிக்கையாளர்களை எளிதல் பெற உதவும் என்றும், நந்தன் நிலேகனி கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

As Tech Titans Meet, Satya Nadella's Qs For Nandan Nilekani talks about aadhar

As Tech Titans Meet, Satya Nadella's Qs For Nandan Nilekani talks about aadhar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X