800 கோடி ரூபாய் ஆர்டரை பிடிக்க ஹெச்பி, இன்போசிஸ் போட்டி..!

நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.

 

இதற்கான தொழில்நுட்ப உதவியை அளிப்பது யார் என்பதே தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியாக உள்ளது. காரணம் இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்

இந்திய தபால் துறை

இந்திய தபால் துறை

இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைகளைக் கொண்டு இருக்கும் தபால் துறை மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும் எண்ணத்தில் அடுத்தச் சில மாதங்களில் இந்திய தபால் துறை தனது பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்கும் துவங்க உள்ளது. இதன் அறிமுகம் இந்திய வங்கி சேவையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

800 கோடி ரூபாய்

800 கோடி ரூபாய்

இப்புதிய வங்கியின் தொழில்நுட்ப தேவையைப் பூர்த்திச் செய்யும் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்ற போட்டி ஹெச்பி, பிடெலிட்டி நிறுவனங்கள் மத்தியில் வலுக்கிறது.

இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு
 

இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு

அடுத்தச் சில நாட்களில் இந்த ஆர்டர்களுக்கான ஆர்டர் இந்திய போஸ்ட் அறிவிக்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியில் ஹெச்பி, பிடெலிட்டி ஆகிய இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு விகிப்பதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

ஹெச்பி நிறுவனம்

ஹெச்பி நிறுவனம்

இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் இன்போசிஸ் துணையுடன் இப்போட்டியில் குதித்துள்ளதால், இந்த ஆர்டரை பெறும் அதிகளவிலான வாய்ப்பு இக்கூட்டணிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிடெலிட்டி நிதி சேவை

பிடெலிட்டி நிதி சேவை

பிடெலிட்டி நிதியியல் சேவை நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான நிதி சேவையை அளித்தாலும் இந்த ஆர்டர் பெறுவதற்கு அதிகளவிலான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி

கூட்டணி

ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தின் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் சேவைக்கு இன்போசிஸ் உதவியைப் பெற்றுள்ள நிலையில், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தைப் பெற ஹெச்பி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இப்போட்டியில் டிசிஎஸ் நிறுவனமும் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையோ, தகவல்களையோ டிசிஎஸ் வெளியிடவில்லை.

11 நிறுவனங்கள்

11 நிறுவனங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 11 நிறுவனங்களுக்குப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்க உரிமம் வழங்கியுள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HP, Infosys, Fidelity eye on India Post Payment Bank project

HP, Infosys, Fidelity eye on India Post Payment Bank project
Story first published: Thursday, March 2, 2017, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X